
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
பரமன் அறிவான் பக்தர்கள் பக்குவம்
“ஈசன் அறியும் இராப்பகலும் தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற்று அறிந்து செயல்ற் றிருந்திடில்
ஈசன்வந் தெம்மிடை ஈண்டிநின் றானே” பாடல் எண் 288
இறைவனாகிய பரம்பொருள், பகலிரவென்று பாராது எந்த நேரமும், தன்மேல் பாசம் வைத்து அன்பு பாராட்டி வழிபடுபவர்கள் யாரென்று அறிவான். எனவே சோதி ஒளியோடு கூடி, அதனோடு கலந்து, வேறு புறச் செயல்கள் எல்லாம் அடங்கத் தியான நிலையில் இருந்தால், இறைவன் நம்மை நாடிவந்து நம்முள் புகுந்து நல்லருள் புரிவான்.