• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Myliddy.org
மயிலிட்டி

திருமந்திரம் - பாகம் 45 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

16/4/2025

0 Comments

 
Picture
​திருமந்திரம் - பாகம் 45
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

சேம நிதி சிவ சிந்தனையே
​

“மயன்பணி கேட்பது மாநந்தி கேட்பின்
அயன்பணி கேட்பது அரண்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே”                              பாடல் எண் 302
​
நந்தியெம் பெருமான் அருளாணைப்படி திருமாலும் பணி செய்வான். சிவத்தொண்டு புரிந்தால் பிரமனும் ஏவல் செய்வான். சிவன் கட்டளைக்கேற்ப நடப்பவர் தேவரும் ஆவர். சிவபெருமான் ஆணைப்படி அருள் வழி நடப்பதால் அவன் அருள் துணை என்றும் நமக்குப் பேரின்பப் பெரும் பற்று ஆகும்.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 44 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

16/3/2025

0 Comments

 
Picture
​திருமந்திரம் ( பாகம் 44 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
ஞான நூல் அறிவு
“நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினால் பண்பின் பயன்கெடும்
கோலொன்று பற்றினால் கூடாப் பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே”                        பாடல் எண் 295
​
அறநூல்கள் கூறிய நெறிமுறைகளின்படி நடந்து, உயர்ந்த நிலை அடைய முடியாதவர்கள், மற்றைய இச்சைகளில் மனம் பற்றுக் கொள்ள, மனிதப் பிறவியின் பண்பு நலம் இழப்பார்கள். கோலெடுத்தால் ஒன்று படாது பறந்தோடும் பறவைகளைப் போல், இந்த உலகப் பற்றாளர்களும், மற்றப் பலவற்றில் மயக்கம் கொண்டு, தடுமாறுகின்றனர்.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 43 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

1/1/2025

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 43 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
பரமன் அறிவான் பக்தர்கள் பக்குவம்
“ஈசன் அறியும் இராப்பகலும் தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற்று அறிந்து செயல்ற் றிருந்திடில்
ஈசன்வந் தெம்மிடை ஈண்டிநின் றானே”                          பாடல் எண் 288
​
இறைவனாகிய பரம்பொருள், பகலிரவென்று பாராது எந்த நேரமும், தன்மேல் பாசம் வைத்து அன்பு பாராட்டி வழிபடுபவர்கள் யாரென்று அறிவான். எனவே சோதி ஒளியோடு கூடி, அதனோடு கலந்து, வேறு புறச் செயல்கள் எல்லாம் அடங்கத் தியான நிலையில் இருந்தால், இறைவன் நம்மை நாடிவந்து நம்முள் புகுந்து நல்லருள் புரிவான்.   
​


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 42 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

7/6/2024

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 42 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

இறைவனோடு இரண்டறக் கலப்பது இன்பம்
“இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவிக்குத் தொழில்பல எண்ணினும்
அன்பில் கலவிசெய்து ஆதிப்பிரான் வைத்த
முன்புஇப் பிறவி முடிவது தானே”                               பாடல் எண் 281  

இவ்வுலக வாழ்வில் ஆன்மாக்கள் இன்பம் எய்தி இருக்கப் பல வழிமுறைகள் வகுத்து வைத்துள்ளான் இறைவன். என்றாலும் வாழ்வு துன்பம் நிறைந்ததாயுள்ளது. இதற்குக் காரணமான வினைத் தொடர்புகளும் பலவாக உள்ளன. எனவே ஆதியான பரம்பொருளோடு அன்பினால் இரண்டறக் கலக்கும் உயிர்களுக்கு, இறைவன் முன்பு தந்த இந்தப் பிறவி முடிவடையும். இனிப் பிறவி இல்லையாகும்.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 41 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

26/4/2024

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 41 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

அன்பு செய்வார்க்கே இன்ப நிலை
என்அன்(பு) உருக்கி இறைவனை ஏத்துமின்
முன்அன்(பு)உருக்கி முதல்வனை நாடுமின்
பின்அன்(பு) உருகிப் பெருந்தகை நந்தியுந்
தன்அன்(பு) எனக்கே தலைநின்ற வாறே”                         பாடல் எண் 274
​
என்ன பேசி என்ன பயன்? அன்பால் அகம் குழைந்து மனம் உருக ஆண்டவனை வணங்குங்கள். முதலில் அகம் குழைய அவன் அருளைப் பெற முயலுங்கள். அதன்படி நான் அன்பு செலுத்திய பேரறிவாளனாகிய நந்தியெம்பெருமான் தன்னுடைய அருளை, அன்பை எனக்குத் தந்துதவ, நான் அவன் அடியவன் ஆனேன்.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 40 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

4/8/2023

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 40 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

வினையால் விளைவது நன்மையும் தீமையும்

“இன்பம் இடரென்(று) இரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறம்அறி யாரே”                             பாடல் எண் 267
​
உலக வாழ்வில் இன்பம், துன்பம் என இரண்டு இருப்பது அவரவர் முற்பிறவியிலே செய்த நன்மை தீமைகளால் விளைந்ததாகும். முற்பிறவியில் நல்லறம் செய்தவர் இப் பிறவியில் இன்பமாக இருக்கிறார்கள். இதைக் கண்கூடாகக் கண்டும், பிறருக்குக் கொடுத்து மகிழும் அன்புள்ளம் இல்லாதவர்கள் அறச் சிந்தனை அற்றவர்களே.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 39 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

16/11/2022

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 39 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

அறம் செய்யார் அடையும் துயர்
​

“எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன
ஒட்டிய நல்லறம் செய்யாதவர் செல்வம்
வட்டிகொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே”                                  பாடல் எண் 260

​எட்டிக்காய் மிகவும் கசப்பானது. உண்பவர் உயிரையும் கொல்லும் என்பர். இப்படிப்பட்ட எட்டி மரம் பழுத்தால் என்ன? அந்த மரத்தின் காய்கள் பழுத்துப் பெரிய பழங்களாகத் தரையெல்லாம் கிடந்தால்தான் என்ன? இதனால் யாருக்கு என்ன பயன்? யாருக்கும் இதனால் ஒரு பயனும் இல்லை. இது போன்றதுதான் அறத்தோடு பொருந்திய புண்ணியச் செயல்களைச் செய்யாதவர்கள் செல்வம். அது யாருக்கும் பயன்படாது. வட்டிக்குப் பொருளைத் தந்து, வட்டி பெற்று இவ்வுலகில் செல்வத்தைச் சேர்த்து வைப்பவர்கள் செல்வத்தின் பயன் அறியாப் பாதகர் ஆவர். ​


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 38 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

24/7/2022

0 Comments

 
Picture
​திருமந்திரம் ( பாகம் 38 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

தக்கவர்க்குச் செய்தலே தருமம்
“அற்றுநின்றார் உண்ணும் ஊணே அறனென்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்றுநின்று ஆங்கொரு கூவல் குளத்தினில்
பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே”                            பாடல் எண் 253

பற்று, பந்தம், பாசம் இவற்றை விட்டொழித்த ஞானிகளுக்கு உணவளிப்பதே மேலான தருமம் என்று நீதி நூல்கள் கூறும். இப்படியிருந்தும் பல நூல் கற்று அறிவு மணம் வீச இருப்பதாகச் சொல்லும் மனிதர்கள், அப்படிப்பட்ட ஞானிகளைப் பார்த்தறிந்து, எங்காவது ஒரு ஆறு குளக்கரைகளில் தியானத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு, அவர்களை அழைத்து வந்து உண்ணச் செய்வதால் பெறக்கூடிய புண்ணியப் பயனை அறியாமல் இருக்கின்றார்களே! அந்தோ பரிதாபம்!.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 37 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

4/3/2022

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 37 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) 

அமுதம் இருக்க நஞ்சை உண்ணும் அறிவீனம்
“கால்கொண்டு சுட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே”                   பாடல் எண் 246
​
மூச்சுக் காற்றைப் (பிராணவாயுவை) முறைப்படுத்தி, நிறுத்தி, பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்து, மூலாக்கினியை மேலேற்றிச் சந்திர கலையாகிய மூலாதாரத்தில் வடியும் அமுத பானத்தை உண்ணாமல், அறிவு மயங்கிக் கள்ளைக் குடிக்கும் மந்த மதியினரைத் தண்டிக்க வேண்டியது, நாடாளும் மன்னன் கடமையாகும்.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 36 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

4/2/2022

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 36 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
அரசர்க்கழகு அறநெறி காத்தல்
“நாள்தொறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தொறும் நாடி அவன்நெறி நாடானேல்
நாள்தொறும் நாடு கெடும்மூடம் நண்ணுமால்
நாள்தொறும் செல்வம் நரபதி குன்றுமே”                       பாடல் 239

அன்றாடம் அரசன் அவனுடைய நாட்டில் அற ஒழுக்கம் கெடாதிருக்கப் பார்த்துக் கொள்ளவேண்டும். அப்படி அவன் அன்றாடம் அவனுடைய நாட்டில் நீதி முறை சரியாக உள்ளதா என்பதை ஆராய்ந்தறியத் தவறுவானேயானால், அவனுடைய நாடு ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டழியும். அறியாமை எங்கும் மிகும். செல்வமும் செல்வாக்கும் நாளும் குறைய, அரசனும் அழிவான்.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 35 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

27/12/2020

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 35 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
அறிந்தும் அறியாத ஆனந்த நிலை
“திருநெறி யாகிய சித்து அசித்தின்றிக்
குருநெறி யாலே குருபதஞ் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணும்
துரிய சமாதியாம் தூய்மறை யோர்க்கே”                              பாடல் 232
​
மேலான ஞான மார்க்கமான, அறிவற்று அறியாமையும் விட்டு, ஆச்சாரியன் வழிகாட்டிய உபதேச முறைப்படி, மெஞ்ஞான குருவாகிய பரம்பொருள் திருவடிகளைத் தியானித்துப், புறக் கருமங்களை, சடங்குகளை, செயல்களை ஒதுக்கி விட்டு, உள் ஒளியில் இறைவனைக் காணும் உண்மை மறைப் பொருள் உணர்ந்தோர்க்குத், தூய சமாதி நிலை சித்திக்கும்.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 34 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

24/11/2020

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 34 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

ஒடுக்கம் முடிவு ஓம் என்னும் பிரணவம்
“வேதாந்தம் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாம் எனாதுகண்டு இன்புறு வோர்களே”                                          பாடல் 225
​
வேத முடிவான உபநிடதங்களின் உண்மைப் பொருளறிய ஆசைப்பட்டு, முப்பதமான அகர, உகர, மகரமாக, அறிவின் எல்லையான (போதாந்தமான) “ஓம்” என்னும் பிரணவத்துள் நின்று, நாதாந்த (ஒலி), வேதாந்த (வேதத்தின் முடிவு), போதாந்தத் (ஞானம்) தலைவனாக விளங்குகின்ற சிவப்பரம்பொருளே (சிவமே) எல்லாவற்றிற்கும் முடிவென்று கண்டு இன்புறுவார்கள்.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 33 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

27/3/2020

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 33 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
மயங்கித் தவிக்கும் மனித வாழ்வு
“போதிரண்டு ஓதிப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துஉட னேநிற்கும்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே”                                 பாடல் 217
​
காலை மாலை ஆகிய இரு வேளையும் வேதம் ஓதி வேள்வி செய்தால் குண்டலினி (மூலாதாரம்) மேலோங்கிச் சிவசக்தியாய் நிற்கும். இருவருடைய உயிர்ச் சத்து (சுக்கிலம், சுரோணிதம்) கலப்பால் உடல் இரண்டு சிறகடித்து வானில் பறப்பது போலிருக்கும். ஆணும் பெண்ணுமாகிய பறவைகள் இதனால் மாற்றம் அடைந்து மயக்கம் கொள்ளும்


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 32 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

28/2/2020

0 Comments

 
Picture
​திருமந்திரம் ( பாகம் 32 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
அருட்செல்வம் – அதைத் தேடுவீர்
“பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்று
அக்குழி தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே”                                   பாடல் 210

சூரியன் உதித்துக் காலைப் பொழுது விடிந்ததுமே வயிற்றுப் பசியை அடக்க அரிய பொருட் செல்வத்தைத் தேடுவீர்கள். எந்தக் குழியை நிரப்பினாலும் இறைவன் புகழை மறவாது போற்றுங்கள். போற்றினால் மன அழுக்கு அகலும். அழுக்ககன்றவுடன் அப்பிறவிக் குழி தானே மூடிவிடும்.


மேலும் படிக்க...
0 Comments

    சைவசித்தாந்த ரத்தினம்
    ​நாகேந்திரம் கருணாநிதி

     

    பதிவுகள்​

    April 2025
    March 2025
    January 2025
    June 2024
    April 2024
    August 2023
    November 2022
    July 2022
    March 2022
    February 2022
    December 2020
    November 2020
    March 2020
    February 2020

    அனைத்துப் பதிவுகள்

    ALL

  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Powered by Create your own unique website with customizable templates.