மயிலிட்டி
  Myliddy.org
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்

மயிலிட்டி துறைமுகம்: சூறைக்காற்றில் றோலர் படகு பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது!

15/11/2020

0 Comments

 
Picture
சீரற்ற கால நிலையின் காரணமாக வீசிய சூறைக்காற்றில் சிக்கி மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் கட்டியிருந்த றோலர் படகு உடைந்து பலத்த  சேதத்திற்குள்ளாகியுள்ளது.

நேற்று இரவு 11.00 மணியள்வில் வீசிய சூறைக்காற்றினால் ஏற்பட்ட கடல் கொந்தளிபில் சிக்கி மயிலிட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம் றசியசிங்கம் என்பவருக்கு சொந்தமான 28 அடி நீளமுடைய றோலர் படகே இவ்வாற. பலத்த சேதத்திற்குள்ளாகியது.

​மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்ற சில மீனவர்கள் இன்று அதிகாலை (4.30 மணி) கரைதிரும்பி போதே றோலர் கடலி நீரில் மூழ்கிக்கொண்டிருப்பது கண்டறிப்பட்டது. அதன் பின்னர் றோலரில் இருந்த மீன்பிடி வலை உள்ளிட்ட உபகரணங்கள் வேறு படகி ஒன்றின் உதவியுடன் இறக்கப்பட்டு நிறைந்திருந்த நீரும் வெளியேற்றப்பட்டு கரைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலையால் பலத்த காற்று வீசிவருவதுடன் கடல் பகுதியும் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

இந்நிலையில் மயிலிட்டி துறைமுகத்தில் கட்டப்படிருந்த உள்ளூர் மீனவருக்கு சொந்தமான றோலர் படகே விபத்துக்குள்ளாகி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளதுழ்

மயிலிட்டி துறைமுகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கல் அணையில் ஏற்பட்டிருக்கும் சேதத்தை சரிசெய்யாமையே துறைமுகப் பகுதிக்குள் அலையின் தாக்கம் வலுவாக உணரப்பட்டமைக்கு காரணம் எனவும், துறைமுக அபிவிருத்தியின் போது குறித்த கல் அணையில் ஏற்பட்ட சேதத்தை முன்னுரிமை அடிப்படையில் சீர்செய்யுமாறு வலியிறுத்திய நிலையில் இதுவரை அது சீர்செய்யப்படவில்லை எனவும் பிரதேச மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சூறைக்காற்றில் சிக்கி உடைந்து பலத்த சேதத்திற்கு உள்ளாகிய றோலர் படகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட உடைப்பினால் கடல் நீர் உட்புகுந்ததால் தாண்டுள்ளது. இவ்வாறு உட்சென்ற கடல் நீர் றோலரின் இயந்திரப்பகுதிக்குள் நிறைந்து நின்றதால் இயந்திரமும் முற்றிலுமாக பயன்படுத்த முடியா நிலையேற்பட்டுள்ளது.

சூறைக்காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் பலத்த சேதமடைந்துள்ள றோலர் படகு சுமார் இருபது இலட்சம் ரூபா பெறுமதியுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி படங்கள்: இரா. மயூதரன்
​

இந்தப் பக்கம் best free website hit counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    மயிலிட்டி செய்திகள்

     

    பதிவுகள்

    August 2021
    March 2021
    February 2021
    January 2021
    December 2020
    November 2020
    January 2020

    முழுப்பதிவுகள்

    All

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023