![]()
மரண அறிவித்தல்
திருமதி. சோதிலிங்கம் கருணாவதி (பேபி) தோற்றம்: 24/12/1951 மறைவு: 05/06/2023 யாழ்ப்பாணம், தொண்டைமானாற்றை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோதிலிங்கம் (நயினார்) கருணாவதி (பேபி) அவர்கள் 05/06/2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார் தம்பையா சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும், அமரர் சின்னத்தம்பி சோதிலிங்கம் (நயினார்) அவர்களின் அன்பு மனைவியும்,
அமரர் ஜெயக்குமார் (பவன்) மற்றும் பவி, லவன், ஜெலிதா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயும்,
ஜோதினி, நவம், புஷ்பா மற்றும் அமரர் கடுந்தவம் ஆகியோரின் மாமியாரும், திவ்யா, ஜீவா, ரோஜா, தனுஷ், கெளதம், பிரியா, லக்ஷனா, லக்ஷிகா, கண்ணன், பிரித்திக்ஷா, அபி ஆகியோரின் பாட்டியும், அமரர்களான இராசதுரை (மீசையப்பா), அருச்சுனன், அருந்தவம் (இராசகிளி), சகாதேவன் (தாராசிங்), கரும்புக்கிளி, தங்கரத்தினம், மகேந்திரலிங்கம் (நயிலோன்-இலண்டன்), தங்கலிங்கம் (நல்லகிளி-கனடா) ஆகியோரின் மைத்துணியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05/06/2023 இன்று மாலை 5.00மணிக்கு தொண்டைமானாற்றில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனத்திற்காக தொண்டைமானாறு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல் -: குடும்பத்தினர். பவி: 075 3763463 லவன்-077 480 8466 ஜெலிதா(சுவிஸ்)-0041784211299
இந்தப் பக்கம்
|
மரண அறிவித்தல்கள் 2023
பதிவுகள்
September 2023
முழுப்பதிவுகள்
|