கலையோடு உறவாடி பகுதி 18 - மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்திற்கு கலாலயாவின் கைவண்ணத்தில் உருவாகிய26/8/2023 ![]()
மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்திற்கு கலாலயாவின் கைவண்ணத்தில் உருவாகிய அன்னம்.
இவ் அன்னவாகனத்தினை தனது உபயமாக வழங்கியவர், சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் மயிலிட்டி ஊர் கிறிஸ்தவ நண்பர் அன்ரன் ஞானப்பிரகாசம் அவர்கள்.
மதங்களை தூண்டி விட்டு, மதவெறியை மனிதர்களுக்குள் விதைத்து , தமிழரின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் அண்மைக்காலமாக எம் மண்ணில் நடந்தேறிவரும் நாடகங்களுக்கு மத்தியில், தூர தேசத்தில் வாழ்ந்து கொண்டு தன் பிறந்த ஊரின் சைவ ஆலயத்திற்கு நீங்கள் ஆற்றிய பணி பாராட்டப்படவேண்டியது. வாழ்த்துகள் ராஜ் அண்ணை. மத நல்லிணக்கம் மயிலிட்டியில் இருந்து ஆரம்பிக்கட்டும்.
மயிலைக்கவி சண் கஜா
இந்தப் பக்கம்
0 Comments
Leave a Reply. |
மயிலைக்கவி
|