![]()
மாணவச் செல்வங்களை செதுக்கிய மாதா கோயிலின் மணி ஒசையும்
மதக் கலவரங்களை தூண்டாது மாணவர்களை செதுக்கிய சிற்பிகள் எங்கள் மதரும் sistersum எங்கள் மனம் வென்ற மகத்தான் மாதா.
பல குடும்பங்களின் தாகம் தீர்த்த வற்றாத கிணறு,
அதில் ஏறி இருந்து கதை பேசுவது எங்கள் நண்பர்கள் மாதா கோயில் தண்ணீர் குடத்துக்கும் காதலுக்கும் நல்ல பொருத்தம். கண்ணால் கதைபேசும் காதல் சந்திப்பும் அங்குதான் . கோணப்புளி மரத்தின் அடியில் விளையாடிய காலமும் இளைப்பாறிய காலமும் விருந்து உண்ட காலமும் உண்டு. மாதாவின் வளவு திருவிழா காலத்தின் ஒரு சொரக்க பூமி. மதங்களை தாண்டிய மாதாவின் பெருநாள் எங்கள் ஊரின் மிகபெரிய கொண்டாட்ட பூமி. மதங்களை தாண்டிய எங்கள் நம்பிக்கை மாதாவின் ஆசீர்வதிக்கப்பட்ட நீரும் அமைதியான மண்டபமும் அந்த புறாக்களின் ஓசை இன்னும் காதுக்குள்ளே கேட்கிறது. நாங்கள் செய்த தவறுக்காக பாவமன்னிப்பு கேட்டோம் fatherஇடம் . கச்சான் கடையும் அந்த பாட்டி தாத்தாவும் கூட கண்ணுக்குள் நிற்கிறார்கள். நாங்கள் செய்த சிரமதானமும் மறக்கமுடியவில்லை. விடை கொடு மாதா என் காலத்தில் ஒருதரம் உன் மண்ணை தொடுவதற்கும் அந்த கோணப்புளிமரத்தையும் கிணத்தில் தண்ணீரும் குடிப்பதற்க்கு. - அஞ்சலி வசீகரன்
இந்தப் பக்கம்
0 Comments
Leave a Reply. |
அஞ்சலி வசீகரன்
மயிலிட்டி பதிவுகள்அனைத்துப் பதிவுகள்
|